தினசரி பஞ்சாங்கம் மற்றும் ஆன்மீக தகவல்கள்
மொழி: தமிழ் | English
அமாவாசை

அமாவாசை

Amavasai

அமாவாசை என்பது நிலவு தெரியாத நாளாகும். தமிழ்நாட்டில் முன்னோர் தர்ப்பணம்/அனுசரணம், விரதம், தியானம், கோயில் வழிபாடு போன்ற மரபுகள் வழக்கத்தில் உள்ளன.

அமாவாசை: 06-04-1978, 09.20 PM முதல் 07-04-1978, 08.45 PM வரை
முடிவடைந்து 17597 நாட்கள் ஆகிறது 07-04-1978

விழா தேதிகள் மற்றும் காலவரிசை

இன்றிலிருந்து கடந்த அமாவாசை
25 நாட்களுக்கு முன்
இன்றிலிருந்து அடுத்த அமாவாசை
3 நாட்களில்

1978 தேதிகள்

Sun, 08 Jan 1978
ஞாயிறு
1978
பிங்கள மார்கழி 24
அமாவாசை தொடக்கம்: 08-01-1978, 01.19 PM | முடிவு: 09-01-1978, 09.29 AM
நண்பகல் 01:19 வரை தேய்பிறை சதுர்த்தசி பின்பு அமாவாசை பிற்பகல் 03:12 வரை மூலம் பின்பு பூராடம்
06:36
18:11
Tue, 07 Feb 1978
செவ்வாய்
1978
பிங்கள தை 25
அமாவாசை தொடக்கம்: 06-02-1978, 11.34 PM | முடிவு: 07-02-1978, 08.24 PM
இரவு 08:24 வரை தேய்பிறை · அமாவாசை பின்பு வளர்பிறை பிரதமை பிற்பகல் 05:48 வரை திருவோணம் பின்பு அவிட்டம்
06:39
18:24
Wed, 08 Mar 1978
புதன்
1978
பிங்கள மாசி 24
அமாவாசை தொடக்கம்: 08-03-1978, 10.06 AM | முடிவு: 09-03-1978, 08.06 AM
காலை 10:06 வரை தேய்பிறை சதுர்த்தசி பின்பு அமாவாசை மறுநாள் அதிகாலை 12:11 வரை சதயம் பின்பு பூரட்டாதி
06:28
18:28
Fri, 07 Apr 1978
வெள்ளி
1978
பிங்கள பங்குனி 24
அமாவாசை தொடக்கம்: 06-04-1978, 09.20 PM | முடிவு: 07-04-1978, 08.45 PM
இரவு 08:45 வரை தேய்பிறை · அமாவாசை பின்பு வளர்பிறை பிரதமை காலை 07:39 வரை உத்திரட்டாதி பின்பு ரேவதி
06:11
18:27
Sat, 06 May 1978
சனி
1978
காளயுக்தி சித்திரை 23
அமாவாசை தொடக்கம்: 06-05-1978, 09.32 AM | முடிவு: 07-05-1978, 10.16 AM
காலை 09:32 வரை தேய்பிறை சதுர்த்தசி பின்பு அமாவாசை பிற்பகல் 04:22 வரை அஸ்வினி பின்பு பரணி
05:58
18:29
Mon, 05 Jun 1978
திங்கள்
1978
காளயுக்தி வைகாசி 22
அமாவாசை தொடக்கம்: 04-06-1978, 10.46 PM | முடிவு: 06-06-1978, 12.31 AM
மறுநாள் அதிகாலை 12:31 வரை தேய்பிறை · அமாவாசை பின்பு வளர்பிறை பிரதமை மறுநாள் அதிகாலை 04:47 வரை ரோகிணி பின்பு மிருகசீரிஷம்
05:55
18:36
Wed, 05 Jul 1978
புதன்
1978
காளயுக்தி ஆனி 21
அமாவாசை தொடக்கம்: 04-07-1978, 01.00 PM | முடிவு: 05-07-1978, 03.20 PM
பிற்பகல் 03:20 வரை தேய்பிறை · அமாவாசை பின்பு வளர்பிறை பிரதமை பிற்பகல் 04:25 வரை திருவாதிரை பின்பு புனர்பூசம்
06:01
18:42
Thu, 03 Aug 1978
வியாழன்
1978
காளயுக்தி ஆடி 18
அமாவாசை தொடக்கம்: 03-08-1978, 04.09 AM | முடிவு: 03-08-1978, 11.59 PM
மறுநாள் காலை 06:30 வரை தேய்பிறை · அமாவாசை பின்பு வளர்பிறை பிரதமை மறுநாள் அதிகாலை 04:18 வரை பூசம் பின்பு ஆயில்யம்
06:07
18:39
Sat, 02 Sep 1978
சனி
1978
காளயுக்தி ஆவணி 17
அமாவாசை தொடக்கம்: 01-09-1978, 07.54 PM | முடிவு: 02-09-1978, 09.38 PM
இரவு 09:38 வரை தேய்பிறை · அமாவாசை பின்பு வளர்பிறை பிரதமை பிற்பகல் 03:52 வரை மகம் பின்பு பூரம்
06:08
18:26
Sun, 01 Oct 1978
ஞாயிறு
1978
காளயுக்தி புரட்டாசி 15
அமாவாசை தொடக்கம்: 01-10-1978, 11.38 AM | முடிவு: 02-10-1978, 12.10 PM
காலை 11:38 வரை தேய்பிறை சதுர்த்தசி பின்பு அமாவாசை மறுநாள் அதிகாலை 02:29 வரை உத்திரம் பின்பு அஸ்தம்
06:06
18:08
Tue, 31 Oct 1978
செவ்வாய்
1978
காளயுக்தி ஐப்பசி 14
அமாவாசை தொடக்கம்: 31-10-1978, 02.35 AM | முடிவு: 01-11-1978, 01.36 AM
மறுநாள் அதிகாலை 01:36 வரை தேய்பிறை · அமாவாசை பின்பு வளர்பிறை பிரதமை காலை 11:46 வரை சித்திரை பின்பு சுவாதி
06:07
17:54
Thu, 30 Nov 1978
வியாழன்
1978
காளயுக்தி கார்த்திகை 14
அமாவாசை தொடக்கம்: 29-11-1978, 04.14 PM | முடிவு: 30-11-1978, 01.49 PM
நண்பகல் 01:49 வரை தேய்பிறை · அமாவாசை பின்பு வளர்பிறை பிரதமை பிற்பகல் 05:53 வரை அனுஷம் பின்பு கேட்டை
06:18
17:53
Fri, 29 Dec 1978
வெள்ளி
1978
காளயுக்தி மார்கழி 14
அமாவாசை தொடக்கம்: 29-12-1978, 12.00 AM | முடிவு: 30-12-1978, 01.05 AM
மறுநாள் அதிகாலை 01:05 வரை தேய்பிறை · அமாவாசை பின்பு வளர்பிறை பிரதமை இரவு 11:45 வரை மூலம் பின்பு பூராடம்
06:32
18:05

அந்த கிரகோரியன் நாளுக்கு தரவு இருக்கும்போது திதி மற்றும் நேர வரிகள் இங்கு சுருக்கமாகத் தெரிகின்றன; முழு விவரம் தினசரி காலண்டரில்.

ஆன்மீக திருவிழா தொடர்ச்சி

தமிழ்நாட்டு ஆன்மீக அனுபவம்

அமாவாசை என்றால் என்ன?

அமாவாசை என்பது வானில் சந்திரன் (நிலவு) முற்றிலுமாகக் கண்ணுக்குத் தெரியாத நாளாகும். இந்துப் பஞ்சாங்கத்தின்படி, சூரியனும் சந்திரனும் ஒரே நேர்க்கோட்டில் இணையும் நாளே அமாவாசை திதி என்று அழைக்கப்படுகிறது. இது ஆன்மீக மற்றும் ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகக் கருதப்படுகிறது.

உலகியல் இன்பங்களைத் தவிர்த்து, மனிதர்கள் தங்களின் ஆத்மாவை நோக்கியும், தங்களுக்கு முன் வாழ்ந்த முன்னோர்களை நோக்கியும் தங்கள் கவனத்தைத் திருப்ப வேண்டிய நாளாக அமாவாசை போற்றப்படுகிறது. புதிய முயற்சிகளைத் தொடங்குவதற்குப் பதிலாக, அகத்தூய்மைக்கும் இறை வழிபாட்டிற்கும் இந்த நாள் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.

முன்னோர் வழிபாடு (பித்ரு தர்ப்பணம்)

அமாவாசையின் மிக முக்கிய நோக்கமே நம்மை ஈன்றெடுத்த முன்னோர்களுக்கு (பித்ருக்களுக்கு) நன்றி செலுத்துவதாகும். அமாவாசை அன்று முன்னோர்களின் ஆத்மாக்கள் பூலோகத்திற்கு வந்து தங்களின் சந்ததியினரைக் காண்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. அவர்களுக்கு எள்ளும் தண்ணீரும் இறைத்து 'தர்ப்பணம்' அளிப்பதன் மூலம் அவர்களின் பசியும் தாகமும் அடங்குவதாக ஆழ்ந்த நம்பிக்கை உள்ளது.

இன்று நாம் அனுபவிக்கும் உடல், செல்வம், அறிவு அனைத்தும் முன்னோர்கள் நமக்கு அளித்த பிச்சையே. எனவே, அவர்களை நினைத்து வழிபடுவதும், காகத்திற்கு உணவிடுவதும் அமாவாசை வழிபாட்டில் தவிர்க்க முடியாத கடமைகளாகும். தர்ப்பணம் செய்யத் தவறினால் பித்ரு தோஷம் ஏற்படும் என்று சாஸ்திரங்கள் எச்சரிக்கின்றன.

தமிழ்நாட்டு மரபுகள்

தமிழ்நாட்டில் தை அமாவாசை, ஆடி அமாவாசை, மற்றும் புரட்டாசி மகாளய அமாவாசை ஆகியவை மிகவும் விசேஷமாகக் கருதப்படுகின்றன. இந்த நாட்களில் ராமேஸ்வரம், கன்னியாகுமரி, பவானி கூடுதுறை, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் மற்றும் பல்வேறு புண்ணிய நதிக்கரைகளிலும், கடற்கரைகளிலும் மக்கள் லட்சக்கணக்கில் கூடி தர்ப்பணம் செய்வார்கள்.

வீடுகளில் வீட்டைச் சுத்தப்படுத்தி, முன்னோர்களுக்குப் பிடித்தமான உணவுகளைச் சமைத்து, இலையிட்டுப் படைத்து வழிபடுவது வழக்கம். அன்றைய தினம் மாமிசம், வெங்காயம், பூண்டு போன்ற தாமச உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்த்து, முழுமையான சைவ உணவையே உட்கொள்ளும் மரபு தீவிரமாகப் பின்பற்றப்படுகிறது.

விரதமும் தான தர்மமும்

அமாவாசை அன்று செய்யப்படும் விரதம் மன அமைதியையும், குடும்பத்தில் ஒற்றுமையையும் மேம்படுத்தும். தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை உணவு ஏதும் உட்கொள்ளாமல் விரதம் இருப்பது மிகவும் சிறந்தது. முன்னோர்களின் ஆசி முழுமையாகக் கிடைக்க, ஏழைகளுக்கும் பசியால் வாடும் உயிர்களுக்கும் அன்னதானம் வழங்குவது மிகவும் புண்ணியமான செயலாகக் கருதப்படுகிறது.

மேலும், இந்த நாளில் குலதெய்வத்தை வழிபடுவது குடும்பத்தை அனைத்து தீய சக்திகளில் இருந்தும் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையும் தமிழ் மக்களிடையே தொன்றுதொட்டு நிலவி வருகிறது.

உள் வழிசெலுத்தல்

தொடர்புடைய பண்டிகைகள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

காகங்கள் எமதர்மனின் தூதுவர்களாகவும், முன்னோர்களின் வடிவமாகவும் கருதப்படுகின்றன. அவை உணவை ஏற்பது முன்னோர்கள் உணவை ஏற்பதாக ஐதீகம்.

ஆடி மாதம் தட்சிணாயன புண்ணிய காலத்தின் தொடக்கம், தை மாதம் உத்தராயண புண்ணிய காலத்தின் தொடக்கம். எனவே இந்த இரு மாத அமாவாசைகளும் பித்ரு வழிபாட்டிற்கு மிக உன்னதமானவை.

பொதுவாக நதிக்கரைகள் அல்லது கடல் போன்ற நீர்நிலைகளுக்குச் சென்று செய்வது சிறந்தது. இயலாதவர்கள் வீட்டில் உள்ள முற்றம் அல்லது மொட்டை மாடியில் எள்ளும் நீரும் இறைத்துச் செய்யலாம்.

தர்ப்பணம் என்பது பொதுவாக ஆண்களால் (தந்தை இல்லாதவர்களால்) செய்யப்படுகிறது. பெண்கள் விரதமிருந்து, உணவமைத்து இறைவனுக்கும் முன்னோர்களுக்கும் படையலிட்டு வழிபடலாம்.