தினசரி பஞ்சாங்கம் மற்றும் ஆன்மீக தகவல்கள்
மொழி: தமிழ் | English
ஏகாதசி
தமிழ்நாடு · பஞ்சாங்க வழிகாட்டி

ஏகாதசி

Ekadasi

ஏகாதசி விரதம் வைஷ்ணவ மரபில் முக்கியமானது. துளசி வழிபாடு, பகவான் நாம சங்கீர்த்தனம், மன கட்டுப்பாடு போன்றவை ஏகாதசி நாளின் மைய அம்சங்கள்.

இன்னும் 229 நாட்கள் உள்ளது

விழா தேதிகள் மற்றும் காலவரிசை

இன்றிலிருந்து கடந்த ஏகாதசி
5 நாட்களுக்கு முன்
இன்றிலிருந்து அடுத்த ஏகாதசி
7 நாட்களில்

2027 தேதிகள்

Sun, 03 Jan 2027
ஞாயிறு
2027
பிலவங்க மார்கழி 19
தேய்பிறை ஏகாதசி விசாகம் - பாதம் 2
Tue, 19 Jan 2027
செவ்வாய்
2027
பிலவங்க தை 5
வளர்பிறை ஏகாதசி ரோகிணி - பாதம் 2
Tue, 02 Feb 2027
செவ்வாய்
2027
பிலவங்க தை 19
தேய்பிறை ஏகாதசி கேட்டை - பாதம் 4
Wed, 17 Feb 2027
புதன்
2027
பிலவங்க மாசி 5
வளர்பிறை ஏகாதசி திருவாதிரை - பாதம் 1
Wed, 03 Mar 2027
புதன்
2027
பிலவங்க மாசி 19
தேய்பிறை ஏகாதசி பூராடம் - பாதம் 2
Thu, 04 Mar 2027
வியாழன்
2027
பிலவங்க மாசி 20
தேய்பிறை ஏகாதசி உத்திராடம் - பாதம் 2
Thu, 18 Mar 2027
வியாழன்
2027
பிலவங்க பங்குனி 4
வளர்பிறை ஏகாதசி பூசம் - பாதம் 1
Fri, 02 Apr 2027
வெள்ளி
2027
பிலவங்க பங்குனி 19
தேய்பிறை ஏகாதசி திருவோணம் - பாதம் 4
Sat, 17 Apr 2027
சனி
2027
பிலவங்க சித்திரை 3
வளர்பிறை ஏகாதசி மகம் - பாதம் 4
Sun, 02 May 2027
ஞாயிறு
2027
பிலவங்க சித்திரை 18
தேய்பிறை ஏகாதசி பூரட்டாதி - பாதம் 1
Sun, 16 May 2027
ஞாயிறு
2027
பிலவங்க வைகாசி 1
வளர்பிறை ஏகாதசி உத்தரம் - பாதம் 4
Tue, 01 Jun 2027
செவ்வாய்
2027
பிலவங்க வைகாசி 17
தேய்பிறை ஏகாதசி ரேவதி - பாதம் 3
Mon, 14 Jun 2027
திங்கள்
2027
பிலவங்க வைகாசி 30
வளர்பிறை ஏகாதசி சித்திரை - பாதம் 3
Wed, 30 Jun 2027
புதன்
2027
பிலவங்க ஆனி 15
தேய்பிறை ஏகாதசி பரணி - பாதம் 2
Wed, 14 Jul 2027
புதன்
2027
பிலவங்க ஆனி 29
வளர்பிறை ஏகாதசி அனுஷம் - பாதம் 1
Thu, 12 Aug 2027
வியாழன்
2027
பிலவங்க ஆடி 27
வளர்பிறை ஏகாதசி கேட்டை - பாதம் 4
Sat, 28 Aug 2027
சனி
2027
பிலவங்க ஆவணி 11
தேய்பிறை ஏகாதசி திருவாதிரை - பாதம் 4
Sat, 11 Sep 2027
சனி
2027
பிலவங்க ஆவணி 25
வளர்பிறை ஏகாதசி உத்திராடம் - பாதம் 1
Sun, 26 Sep 2027
ஞாயிறு
2027
பிலவங்க புரட்டாசி 9
தேய்பிறை ஏகாதசி பூசம் - பாதம் 3
Mon, 11 Oct 2027
திங்கள்
2027
பிலவங்க புரட்டாசி 24
வளர்பிறை ஏகாதசி அவிட்டம் - பாதம் 3
Mon, 25 Oct 2027
திங்கள்
2027
பிலவங்க ஐப்பசி 8
தேய்பிறை ஏகாதசி மகம் - பாதம் 3
Wed, 10 Nov 2027
புதன்
2027
பிலவங்க ஐப்பசி 24
வளர்பிறை ஏகாதசி உத்திரட்டாதி - பாதம் 1
Wed, 24 Nov 2027
புதன்
2027
பிலவங்க கார்த்திகை 8
தேய்பிறை ஏகாதசி அத்தம் - பாதம் 2
Thu, 09 Dec 2027
வியாழன்
2027
பிலவங்க கார்த்திகை 23
வளர்பிறை ஏகாதசி ரேவதி - பாதம் 3
Thu, 23 Dec 2027
வியாழன்
2027
பிலவங்க மார்கழி 7
தேய்பிறை ஏகாதசி சுவாதி - பாதம் 2

அந்த கிரகோரியன் நாளுக்கு தரவு இருக்கும்போது திதி மற்றும் நேர வரிகள் இங்கு சுருக்கமாகத் தெரிகின்றன; முழு விவரம் தினசரி காலண்டரில்.

ஆன்மீக திருவிழா தொடர்ச்சி

தமிழ்நாட்டு ஆன்மீக அனுபவம்

ஏகாதசி என்றால் என்ன?

இந்து ஆன்மீக சாஸ்திரங்களில் மிக உயர்ந்ததும், புனிதம் வாய்ந்ததுமான விரதமாக 'ஏகாதசி விரதம்' போற்றப்படுகிறது. 'ஏகாதசி' என்பது சமஸ்கிருத வார்த்தையாகும்; 'ஏகம்' என்றால் ஒன்று, 'தசம்' என்றால் பத்து, ஆகப் பதினொன்றாவது திதியையே இது குறிக்கிறது. ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறையில் ஒன்றும், தேய்பிறையில் ஒன்றுமாக இரண்டு ஏகாதசிகள் வரும்.

இந்த நன்னாள் முழுமையாகக் காக்கும் கடவுளான மகா விஷ்ணுவுக்கு (பெருமாளுக்கு) அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மற்ற விரதங்களை விட ஏகாதசி விரதம் உடலுக்கும், மனதுக்கும், ஆன்மாவுக்கும் அளப்பரிய நன்மைகளைத் தரக்கூடியது எனப் பத்ம புராணம் உள்ளிட்ட பல புராணங்கள் மிக விரிவாகப் புகழ்கின்றன.

விரதத்தின் அறிவியல் மற்றும் தத்துவம்

ஏகாதசி விரதம் என்பது வெறும் பட்டினி கிடப்பதல்ல; அது ஒரு மிகச் சிறந்த அறிவியல் மற்றும் உளவியல் பயிற்சியாகும். மனித உடலில் உள்ள 5 ஞானேந்திரியங்கள், 5 கர்மேந்திரியங்கள் மற்றும் மனம் ஆகிய பதினொன்றையும், ஏகாதசி திதியன்று ஒன்றாகக் கட்டுப்படுத்தி இறைவனின் மீது நிலைநிறுத்துவதே இதன் உண்மையான தத்துவமாகும்.

அறிவியல் ரீதியாக, ஏகாதசி அன்று வளிமண்டல அழுத்தம் மாறுபடும் என்பதால், செரிமான மண்டலம் சற்று மந்தமாகச் செயல்படும். எனவே, அந்த நாளில் உணவைத் தவிர்த்து உடலுக்கு ஓய்வு கொடுப்பதன் மூலம், உடலில் உள்ள நச்சுக்கள் முழுமையாக வெளியேறி, நோயெதிர்ப்பு சக்தி பன்மடங்கு அதிகரிக்கிறது என்று தற்கால மருத்துவமும் இதை ஏற்றுக்கொள்கிறது.

விரத முறைகள்

ஏகாதசி விரதம் இருப்பவர்கள் முந்தைய நாளான தசமி அன்றே ஒரு வேளை மட்டும் உணவு உட்கொள்ள வேண்டும். ஏகாதசி நன்னாளில் அதிகாலை எழுந்து நீராடி, துளசி தீர்த்தம் மட்டும் அருந்தி, நாள் முழுவதும் உணவு ஏதும் உட்கொள்ளாமல் (உபவாசம்) இருக்க வேண்டும். அன்றைய தினம் அரிசி உணவைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என்பது மிக முக்கிய விதியாகும்.

பகல் முழுவதும் விஷ்ணு சஹஸ்ரநாமம், பகவத் கீதை ஆகியவற்றைப் படித்து, இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து (ஜாகரணம்) இறைவனின் நாமத்தைப் பாட வேண்டும். மறுநாள் துவாதசி அன்று அதிகாலையில், அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவற்றை உணவில் சேர்த்துச் சாப்பிட்டு விரதத்தை நிறைவு (பாரணை) செய்வது முழுமையான பலனைத் தரும்.

ஏகாதசி விரதத்தின் பலன்கள்

ஏகாதசி விரதத்தை முறையோடு கடைப்பிடித்தால், மனிதனின் கொடிய பாவங்கள் அனைத்தும் அழிந்துவிடும் என்பது இந்து தர்மத்தின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். இந்த விரதம் ஒரு மனிதனுக்குக் கோபத்தைக் குறைத்து, அபாரமான மன அமைதியையும், பொறுமையையும் தருகிறது.

முக்காலத்திலும் சிறந்த விரதம் ஏகாதசி விரதம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. தொடர்ந்து ஏகாதசி விரதம் இருப்பவர்கள் மரணத்திற்குப் பின் வைகுண்டத்தை அடைந்து, பிறப்பற்ற முக்தி நிலையைப் பெறுவார்கள் என்பது விஷ்ணு பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கையாகும்.

உள் வழிசெலுத்தல்

தொடர்புடைய பண்டிகைகள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

புராணங்களின்படி, ஏகாதசி அன்று அனைத்துப் பாவங்களும் தானியங்களில், குறிப்பாக அரிசியில் தஞ்சம் புகுவதாக ஐதீகம். எனவே அரிசி உணவைத் தவிர்ப்பது உடல் மற்றும் மனத் தூய்மைக்கு அவசியமாகும்.

ஏகாதசி விரதத்தை முடித்து, மறுநாள் (துவாதசி) காலையில் நெல்லிக்காய், அகத்திக்கீரை சேர்ந்த உணவை உண்டு விரதத்தை நிறைவு செய்யும் முறையே துவாதசி பாரணை எனப்படும்.

கடுமையான விரதம் இருக்க முடியாதவர்கள் பால், பழங்கள், அல்லது அவல் போன்ற எளிய உணவுகளை எடுத்துக் கொண்டு இறைவனைத் தியானிப்பது தப்பில்லை. பக்திதான் முக்கியம்.

ஆம், இரவு முழுவதும் விழித்திருந்து (ஜாகரணம்) இறைவனின் நாமங்களைப் பாடுவது விரதத்தின் முழுப் பலனையும் தரும். தூக்கத்தை வெல்வது மனக் கட்டுப்பாட்டின் அடையாளமாகும்.