தினசரி பஞ்சாங்கம் மற்றும் ஆன்மீக தகவல்கள்
மொழி: தமிழ் | English
கிருத்திகை

கிருத்திகை

Krithigai

கிருத்திகை நன்னாள் முருகப் பெருமானுக்கு உகந்த மிகவும் விசேஷமான நாளாகும். ஒவ்வொரு மாதமும் வரும் கிருத்திகை நட்சத்திரத்தில் முருகனை வழிபடுவது பல நன்மைகளைத் தரும்.

கிருத்திகை: 08-09-1925, 01.19 AM முதல் 09-09-1925, 02.31 AM வரை
முடிவடைந்து 36805 நாட்கள் ஆகிறது 08-09-1925

விழா தேதிகள் மற்றும் காலவரிசை

இன்றிலிருந்து கடந்த கிருத்திகை
1 நாட்களுக்கு முன்
இன்றிலிருந்து அடுத்த கிருத்திகை
26 நாட்களில்

1925 தேதிகள்

Tue, 06 Jan 1925
செவ்வாய்
1925
ரக்தாட்சி மார்கழி 23
கிருத்திகை தொடக்கம்: 05-01-1925, 07.19 AM | முடிவு: 06-01-1925, 10.00 AM
மறுநாள் அதிகாலை 12:28 வரை வளர்பிறை துவாதசி பின்பு வளர்பிறை திரயோதசி காலை 10:00 வரை கார்த்திகை பின்பு ரோகிணி
06:36
18:10
Mon, 02 Feb 1925
திங்கள்
1925
ரக்தாட்சி தை 20
கிருத்திகை தொடக்கம்: 01-02-1925, 02.09 PM | முடிவு: 02-02-1925, 11.59 PM
நண்பகல் 12:58 வரை வளர்பிறை நவமி பின்பு வளர்பிறை தசமி கார்த்திகை - பாதம் 3
06:40
18:22
Sun, 01 Mar 1925
ஞாயிறு
1925
ரக்தாட்சி மாசி 18
கிருத்திகை தொடக்கம்: 28-02-1925, 10.24 PM | முடிவு: 02-03-1925, 12.28 AM
மறுநாள் அதிகாலை 04:33 வரை வளர்பிறை சப்தமி பின்பு வளர்பிறை அஷ்டமி மறுநாள் அதிகாலை 12:28 வரை கார்த்திகை பின்பு ரோகிணி
06:32
18:28
Sat, 25 Apr 1925
சனி
1925
குரோதன சித்திரை 13
கிருத்திகை தொடக்கம்: 24-04-1925, 03.54 PM | முடிவு: 25-04-1925, 05.28 PM
காலை 08:59 வரை வளர்பிறை துவிதியை பின்பு வளர்பிறை திருதியை பிற்பகல் 05:28 வரை கார்த்திகை பின்பு ரோகிணி
06:02
18:28
Fri, 22 May 1925
வெள்ளி
1925
குரோதன வைகாசி 9
கிருத்திகை தொடக்கம்: 21-05-1925, 11.02 PM | முடிவு: 23-05-1925, 12.48 AM
இரவு 09:18 வரை தேய்பிறை · அமாவாசை பின்பு வளர்பிறை பிரதமை மறுநாள் அதிகாலை 12:48 வரை கார்த்திகை பின்பு ரோகிணி
05:55
18:32
Thu, 18 Jun 1925
வியாழன்
1925
குரோதன ஆனி 4
கிருத்திகை தொடக்கம்: 18-06-1925, 04.57 AM | முடிவு: 18-06-1925, 11.59 PM
காலை 06:29 வரை தேய்பிறை துவாதசி பின்பு தேய்பிறை திரயோதசி மறுநாள் காலை 06:57 வரை கார்த்திகை பின்பு ரோகிணி
05:57
18:39
Thu, 16 Jul 1925
வியாழன்
1925
குரோதன ஆடி 1
கிருத்திகை தொடக்கம்: 15-07-1925, 10.36 AM | முடிவு: 16-07-1925, 12.39 PM
பிற்பகல் 05:48 வரை தேய்பிறை ஏகாதசி பின்பு தேய்பிறை துவாதசி நண்பகல் 12:39 வரை கார்த்திகை பின்பு ரோகிணி
06:03
18:42
Wed, 12 Aug 1925
புதன்
1925
குரோதன ஆடி 28
கிருத்திகை தொடக்கம்: 11-08-1925, 05.11 PM | முடிவு: 12-08-1925, 06.56 PM
மறுநாள் அதிகாலை 04:28 வரை தேய்பிறை நவமி பின்பு தேய்பிறை தசமி மாலை 06:56 வரை கார்த்திகை பின்பு ரோகிணி
06:08
18:36
Tue, 08 Sep 1925
செவ்வாய்
1925
குரோதன ஆவணி 24
கிருத்திகை தொடக்கம்: 08-09-1925, 01.19 AM | முடிவு: 09-09-1925, 02.31 AM
பிற்பகல் 03:52 வரை தேய்பிறை சஷ்டி பின்பு தேய்பிறை சப்தமி மறுநாள் அதிகாலை 02:31 வரை கார்த்திகை பின்பு ரோகிணி
06:07
18:22
Tue, 06 Oct 1925
செவ்வாய்
1925
குரோதன புரட்டாசி 21
கிருத்திகை தொடக்கம்: 05-10-1925, 10.38 AM | முடிவு: 06-10-1925, 11.21 AM
காலை 06:33 வரை தேய்பிறை சதுர்த்தி பின்பு தேய்பிறை பஞ்சமி காலை 11:21 வரை கார்த்திகை பின்பு ரோகிணி
06:05
18:05
Mon, 02 Nov 1925
திங்கள்
1925
குரோதன ஐப்பசி 17
கிருத்திகை தொடக்கம்: 01-11-1925, 07.53 PM | முடிவு: 02-11-1925, 08.28 PM
இரவு 10:12 வரை தேய்பிறை துவிதியை பின்பு தேய்பிறை திருதியை இரவு 08:28 வரை கார்த்திகை பின்பு ரோகிணி
06:08
17:54
Sun, 27 Dec 1925
ஞாயிறு
1925
குரோதன மார்கழி 12
கிருத்திகை தொடக்கம்: 26-12-1925, 09.57 AM | முடிவு: 27-12-1925, 11.10 AM
மறுநாள் அதிகாலை 04:12 வரை வளர்பிறை திரயோதசி பின்பு வளர்பிறை சதுர்த்தசி காலை 11:10 வரை கார்த்திகை பின்பு ரோகிணி
06:32
18:04

அந்த கிரகோரியன் நாளுக்கு தரவு இருக்கும்போது திதி மற்றும் நேர வரிகள் இங்கு சுருக்கமாகத் தெரிகின்றன; முழு விவரம் தினசரி காலண்டரில்.

ஆன்மீக திருவிழா தொடர்ச்சி

தமிழ்நாட்டு ஆன்மீக அனுபவம்

கிருத்திகை என்றால் என்ன?

இந்துப் பஞ்சாங்கத்தின்படி, 27 நட்சத்திரங்களில் மூன்றாவது நட்சத்திரம் கிருத்திகை (கார்த்திகை) ஆகும். இந்த நட்சத்திரம் முருகப் பெருமானின் அவதாரத்தோடு நெருங்கிய தொடர்புடையது. சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகள் சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக மாறின. அந்த ஆறு குழந்தைகளையும் வளர்க்கும் பொறுப்பை ஆறு கார்த்திகைப் பெண்கள் ஏற்றனர். இதனால் முருகனுக்கு 'கார்த்திகேயன்' என்ற பெயரும் உண்டு.

ஒவ்வொரு மாதமும் சந்திரன் கிருத்திகை நட்சத்திரத்தைக் கடக்கும் நாள் 'மாதக் கிருத்திகை' என்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் முருகப் பெருமான் கோயில் கொண்டுள்ள அனைத்து தலங்களிலும் இந்நாளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

கிருத்திகை விரதத்தின் மகிமை

கிருத்திகை அன்று முருகனுக்கு விரதம் இருப்பது மிகவும் விசேஷமானது. அன்றைய தினம் காலையில் எழுந்து நீராடி, வீட்டைச் சுத்தம் செய்து, முருகப் பெருமான் படத்திற்கு மலர்களால் அலங்கரித்து தீபதூப ஆராதனைகள் செய்ய வேண்டும். விரதம் இருப்பவர்கள் பகல் முழுவதும் உண்ணா நோன்பிருந்து அல்லது பால், பழம் மட்டும் சாப்பிட்டு மாலையில் முருகன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்த பின் விரதத்தை முடிப்பது வழக்கம்.

தமிழ்நாட்டில் பழனி, திருச்செந்தூர் போன்ற முருகன் தலங்களுக்குப் பாதயாத்திரை செல்பவர்கள் இந்த நாளில் தங்கள் பயணத்தைத் தொடங்குவது அல்லது முக்கிய பூஜைகளைச் செய்வது வழக்கம். இந்த விரதம் மன அமைதியையும், தைரியத்தையும், வாழ்க்கையில் வெற்றியையும் தரும்.

வழிபாட்டுப் பலன்கள்

கிருத்திகை நாளில் முருகனை முழுமனதுடன் வழிபட்டால், செவ்வாய் தோஷம் நீங்கும், திருமணத் தடை விலகும், மற்றும் கடன் தொல்லைகள் அகலும் என்பது ஐதீகம். மேலும் குழந்தை இல்லாத தம்பதியருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.

இந்த நாளில் கந்த சஷ்டி கவசம், திருப்புகழ் போன்ற பக்திப் பாடல்களைப் பாடுவது வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். முருகனின் அருள் கிடைத்தால் எத்தகைய கஷ்டங்களும் பனிபோல நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

உள் வழிசெலுத்தல்

தொடர்புடைய பண்டிகைகள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஒவ்வொரு மாதமும் வரும் கிருத்திகை நட்சத்திரம் மாதக் கிருத்திகை எனப்படும். கார்த்திகை மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் 'கார்த்திகை தீபம்' அல்லது 'பெரிய கார்த்திகை' என்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

நாள் முழுவதும் விரதமிருந்து, மாலையில் அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று தரிசித்த பிறகே உணவு உண்டு விரதத்தை முடிக்க வேண்டும்.

வீட்டைச் சுத்தம் செய்து, முருகனுக்கு விளக்கேற்றி, கந்த சஷ்டி கவசம் படித்து வழிபடுவது மிகவும் சிறப்பு.

முருகன் மீது பக்தி கொண்ட அனைவரும் இந்த விரதத்தை இருக்கலாம். குறிப்பாக செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு இது மிகவும் நல்லது.

ஆம், கிருத்திகை விரதம் இருந்து முருகனை வேண்டிக் கொண்டால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.