தினசரி பஞ்சாங்கம் மற்றும் ஆன்மீக தகவல்கள்
மொழி: தமிழ் | English
பிரதோஷம்
தமிழ்நாடு · பஞ்சாங்க வழிகாட்டி

பிரதோஷம்

Pradosham

பிரதோஷம் என்பது திரயோதசி திதியில் சிவ வழிபாடு சிறப்பாக கருதப்படும் நாளாகும். தமிழ்நாட்டில் பிரதோஷ கால வழிபாடு, நந்தி அபிஷேகம், அர்ச்சனை போன்றவை வழக்கமாக நடைபெறும்.

முடிவடைந்து 43253 நாட்கள் ஆகிறது

விழா தேதிகள் மற்றும் காலவரிசை

இன்றிலிருந்து கடந்த பிரதோஷம்
3 நாட்களுக்கு முன்
இன்றிலிருந்து அடுத்த பிரதோஷம்
10 நாட்களில்

1907 தேதிகள்

Sat, 12 Jan 1907
சனி
1907
பிலவங்க மார்கழி 28
தேய்பிறை திரயோதசி கேட்டை - பாதம் 4
Sun, 27 Jan 1907
ஞாயிறு
1907
பிலவங்க தை 14
வளர்பிறை திரயோதசி திருவாதிரை - பாதம் 3
Tue, 26 Feb 1907
செவ்வாய்
1907
பிலவங்க மாசி 14
வளர்பிறை திரயோதசி ஆயிலியம் - பாதம் 1
Tue, 12 Mar 1907
செவ்வாய்
1907
பிலவங்க மாசி 28
தேய்பிறை திரயோதசி அவிட்டம் - பாதம் 2
Wed, 27 Mar 1907
புதன்
1907
பிலவங்க பங்குனி 13
வளர்பிறை திரயோதசி மகம் - பாதம் 3
Wed, 10 Apr 1907
புதன்
1907
பிலவங்க பங்குனி 27
தேய்பிறை திரயோதசி பூரட்டாதி - பாதம் 1
Fri, 26 Apr 1907
வெள்ளி
1907
பிலவங்க சித்திரை 13
வளர்பிறை திரயோதசி அத்தம் - பாதம் 1
Fri, 10 May 1907
வெள்ளி
1907
பிலவங்க சித்திரை 27
தேய்பிறை திரயோதசி ரேவதி - பாதம் 4
Sat, 25 May 1907
சனி
1907
பிலவங்க வைகாசி 11
வளர்பிறை திரயோதசி சித்திரை - பாதம் 4
Sat, 08 Jun 1907
சனி
1907
பிலவங்க வைகாசி 25
தேய்பிறை திரயோதசி பரணி - பாதம் 3
Mon, 24 Jun 1907
திங்கள்
1907
பிலவங்க ஆனி 10
வளர்பிறை திரயோதசி அனுஷம் - பாதம் 3
Mon, 08 Jul 1907
திங்கள்
1907
பிலவங்க ஆனி 24
தேய்பிறை திரயோதசி மிருகசீரிடம் - பாதம் 1
Tue, 23 Jul 1907
செவ்வாய்
1907
பிலவங்க ஆடி 8
வளர்பிறை திரயோதசி மூலம் - பாதம் 2
Tue, 06 Aug 1907
செவ்வாய்
1907
பிலவங்க ஆடி 22
தேய்பிறை திரயோதசி திருவாதிரை - பாதம் 3
Wed, 07 Aug 1907
புதன்
1907
பிலவங்க ஆடி 23
தேய்பிறை திரயோதசி புனர்பூசம் - பாதம் 2
Wed, 21 Aug 1907
புதன்
1907
பிலவங்க ஆவணி 5
வளர்பிறை திரயோதசி உத்திராடம் - பாதம் 1
Thu, 05 Sep 1907
வியாழன்
1907
பிலவங்க ஆவணி 20
தேய்பிறை திரயோதசி பூசம் - பாதம் 4
Fri, 20 Sep 1907
வெள்ளி
1907
பிலவங்க புரட்டாசி 4
வளர்பிறை திரயோதசி சதயம் - பாதம் 1
Sat, 05 Oct 1907
சனி
1907
பிலவங்க புரட்டாசி 19
தேய்பிறை திரயோதசி பூரம் - பாதம் 2
Sat, 19 Oct 1907
சனி
1907
பிலவங்க ஐப்பசி 3
வளர்பிறை திரயோதசி பூரட்டாதி - பாதம் 4
Mon, 04 Nov 1907
திங்கள்
1907
பிலவங்க ஐப்பசி 19
தேய்பிறை திரயோதசி சித்திரை - பாதம் 1
Sun, 17 Nov 1907
ஞாயிறு
1907
பிலவங்க கார்த்திகை 2
வளர்பிறை திரயோதசி ரேவதி - பாதம் 3
Tue, 03 Dec 1907
செவ்வாய்
1907
பிலவங்க கார்த்திகை 18
தேய்பிறை திரயோதசி சுவாதி - பாதம் 3
Tue, 17 Dec 1907
செவ்வாய்
1907
பிலவங்க மார்கழி 2
வளர்பிறை திரயோதசி கார்த்திகை - பாதம் 2

அந்த கிரகோரியன் நாளுக்கு தரவு இருக்கும்போது திதி மற்றும் நேர வரிகள் இங்கு சுருக்கமாகத் தெரிகின்றன; முழு விவரம் தினசரி காலண்டரில்.

ஆன்மீக திருவிழா தொடர்ச்சி

தமிழ்நாட்டு ஆன்மீக அனுபவம்

பிரதோஷம் என்றால் என்ன?

பிரதோஷம் என்பது இந்துக்களின் மிக முக்கியமான மற்றும் சக்திவாய்ந்த சிவ வழிபாட்டு நாளாகும். ஒவ்வொரு சந்திர மாதத்திலும் வளர்பிறை (சுக்ல பட்சம்) மற்றும் தேய்பிறை (கிருஷ்ண பட்சம்) ஆகிய இரண்டு காலங்களிலும் வரும் பதின்மூன்றாம் நாளான 'திரயோதசி' திதியன்று பிரதோஷம் அனுசரிக்கப்படுகிறது.

'தோஷம்' என்றால் பாவம் அல்லது குற்றம்; 'பிரதோஷம்' என்றால் பாவங்களை அறவே நீக்கும் புண்ணிய காலம் என்று பொருள். சூரிய அஸ்தமனத்திற்கு சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பும், அஸ்தமனத்திற்குப் பின் ஒன்றரை மணி நேரமும் உள்ள அந்த 3 மணி நேரமே (மாலை 4.30 முதல் 7.30 வரை) 'பிரதோஷ வேளை' எனப்படும். இந்த நேரத்தில் சிவபெருமானை வழிபட்டால் நமது அனைத்து கர்ம வினைகளும், தோஷங்களும் நீங்கிவிடும் என்பது சிவ ஆகமங்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

புராணப் பின்னணி

பிரதோஷ வழிபாட்டின் மகிமையைப் பாற்கடல் கடைந்த புராணக் கதையோடு தொடர்புபடுத்துகிறார்கள். தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்தைப் பெறுவதற்காகப் பாற்கடலைக் கடைந்தபோது, அதிலிருந்து முதலில் ஆலகால விஷம் வெளிவந்தது. அந்த கொடிய விஷம் உலகை அழிக்காமல் இருக்க, சிவபெருமான் அதனைத் தானே அருந்தி, தன் தொண்டையில் (நீலகண்டனாக) நிறுத்தி உலகைக் காப்பாற்றினார்.

விஷத்தின் வீரியத்தால் சிவபெருமான் மயக்க நிலையில் இருப்பது போல் காட்சியளித்தார். பின்னர், திரயோதசி திதியன்று மாலை வேளையில் கண்விழித்து, தனது வாகனமான நந்தி தேவரின் கொம்புகளுக்கு இடையே நின்றபடி, உடுக்கை அடித்து ஆனந்தத் தாண்டவம் ஆடினார். அந்த உன்னதமான நிகழ்வைக் குறிப்பதே பிரதோஷ வழிபாட்டுக் காலமாகும்.

நந்தி தேவரின் முக்கியத்துவம்

பிரதோஷ காலத்தில் நந்தி தேவருக்குத் தான் முதல் மரியாதையும், பிரதான வழிபாடும் நடைபெறும். சிவபெருமான் நந்தியின் கொம்புகளுக்கிடையே நடனமாடுவதாக ஐதீகம். எனவே, சிவாலயங்களில் நந்திக்கு பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம் போன்ற பதினாறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மிக விமரிசையாக நடைபெறும்.

அபிஷேகத்திற்குப் பிறகு நந்திக்கு அருகம்புல், வில்வம் மற்றும் பல வண்ண மலர்களால் மாலை அணிவிக்கப்படும். பக்தர்கள் நந்தியின் இரண்டு கொம்புகளுக்கு இடையில் வழியாகப் பார்த்து மூலவரான சிவலிங்கத்தைத் தரிசிப்பதே பிரதோஷத்தின் மிகச் சிறந்த தரிசன முறையாகத் தமிழ்நாட்டு சிவாலயங்களில் இன்றும் பின்பற்றப்படுகிறது.

பிரதோஷம் (வளர்பிறை vs தேய்பிறை)

மாதத்திற்கு இரண்டு முறை (திரயோதசி திதியில்) பிரதோஷம் வரும். சிவபெருமானுக்கும் நந்திதேவருக்கும் உகந்த நேரம் இது.

வளர்பிறை பிரதோஷம் (சுக்கில பட்சம்): இது 'வளர்ச்சி மற்றும் ஆக்கபூர்வமான பலன்களைத்' தரும். புதிய காரியங்கள் தொடங்க, செல்வம் பெருக, நினைத்த காரியங்கள் கைமேல் பலன் தர வளர்பிறை பிரதோஷத்தில் வழிபடுவது சிறப்பு.

தேய்பிறை பிரதோஷம் (கிருஷ்ண பட்சம்): இது 'பாவங்கள் மற்றும் தடைகளை நீக்கும்' தன்மை கொண்டது. கடன் தொல்லை, தீராத நோய், கர்ம வினைகள் விலக தேய்பிறை பிரதோஷ வழிபாடு மிகவும் சிறந்தது. (குறிப்பாக சனிக்கிழமைகளில் வரும் தேய்பிறை 'சனி பிரதோஷம்' மகா சக்தி வாய்ந்தது).

உள் வழிசெலுத்தல்

தொடர்புடைய பண்டிகைகள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

சூரிய அஸ்தமனத்திற்கு முந்தைய 1.30 மணி நேரமும், பிந்தைய 1.30 மணி நேரமும் அடங்கிய மாலை 4.30 முதல் 7.30 மணி வரையிலான நேரமே பிரதோஷ வேளையாகும்.

பிரதோஷ நேரத்தில் சிவபெருமான் நந்தியின் கொம்புகளுக்கு இடையே ஆனந்தத் தாண்டவம் ஆடுவதாக ஐதீகம். எனவே நந்தியின் கொம்புகளுக்கு இடையே சிவதரிசனம் செய்வது முழுப் பலனைத் தரும்.

காலை முதல் மாலை வரை உணவு உட்கொள்ளாமல் நீர் மட்டும் அருந்தி விரதம் இருக்க வேண்டும். மாலை பிரதோஷ பூஜை முடிந்து, நந்திக்கு இட்ட பிரசாதத்தை உண்டு விரதத்தை முடிக்க வேண்டும்.

அருகம்புல் உடலின் உஷ்ணத்தைக் குறைக்கும் தன்மை கொண்டது. ஆலகால விஷத்தின் உஷ்ணத்தைத் தாங்கிய நந்திக்கும், சிவனுக்கும் குளிர்ச்சியைத் தருவதற்காக அருகம்புல் சாற்றப்படுகிறது.