தினசரி பஞ்சாங்கம் மற்றும் ஆன்மீக தகவல்கள்
மொழி: தமிழ் | English
சஷ்டி
தமிழ்நாடு · பஞ்சாங்க வழிகாட்டி

சஷ்டி

Shasti

சஷ்டி (ஷஷ்டி) திதி முருக பக்தியில் முக்கியமானது. சஷ்டி விரதம், முருகன் வழிபாடு, கந்தர் சஷ்டி கவசம் பாராயணம் போன்றவை தமிழ்நாட்டில் பரவலாக நடைமுறைப்படுகின்றன.

முடிவடைந்து 24627 நாட்கள் ஆகிறது

விழா தேதிகள் மற்றும் காலவரிசை

இன்றிலிருந்து கடந்த சஷ்டி
11 நாட்களுக்கு முன்
இன்றிலிருந்து அடுத்த சஷ்டி
2 நாட்களில்

1958 தேதிகள்

Sat, 11 Jan 1958
சனி
1958
விளம்பி மார்கழி 27
தேய்பிறை சஷ்டி உத்தரம் - பாதம் 4
Sun, 26 Jan 1958
ஞாயிறு
1958
விளம்பி தை 13
வளர்பிறை சஷ்டி ரேவதி - பாதம் 2
Sun, 09 Feb 1958
ஞாயிறு
1958
விளம்பி தை 27
தேய்பிறை சஷ்டி சித்திரை - பாதம் 3
Tue, 25 Feb 1958
செவ்வாய்
1958
விளம்பி மாசி 13
வளர்பிறை சஷ்டி பரணி - பாதம் 3
Wed, 26 Mar 1958
புதன்
1958
விளம்பி பங்குனி 12
வளர்பிறை சஷ்டி ரோகிணி - பாதம் 1
Wed, 09 Apr 1958
புதன்
1958
விளம்பி பங்குனி 26
தேய்பிறை சஷ்டி மூலம் - பாதம் 1
Fri, 25 Apr 1958
வெள்ளி
1958
விளம்பி சித்திரை 12
வளர்பிறை சஷ்டி திருவாதிரை - பாதம் 4
Fri, 09 May 1958
வெள்ளி
1958
விளம்பி சித்திரை 26
தேய்பிறை சஷ்டி உத்திராடம் - பாதம் 3
Sat, 24 May 1958
சனி
1958
விளம்பி வைகாசி 10
வளர்பிறை சஷ்டி பூசம் - பாதம் 3
Sat, 07 Jun 1958
சனி
1958
விளம்பி வைகாசி 24
தேய்பிறை சஷ்டி அவிட்டம் - பாதம் 2
Mon, 23 Jun 1958
திங்கள்
1958
விளம்பி ஆனி 9
வளர்பிறை சஷ்டி பூரம் - பாதம் 2
Mon, 07 Jul 1958
திங்கள்
1958
விளம்பி ஆனி 23
தேய்பிறை சஷ்டி பூரட்டாதி - பாதம் 3
Tue, 22 Jul 1958
செவ்வாய்
1958
விளம்பி ஆடி 6
வளர்பிறை சஷ்டி அத்தம் - பாதம் 2
Tue, 05 Aug 1958
செவ்வாய்
1958
விளம்பி ஆடி 20
தேய்பிறை சஷ்டி ரேவதி - பாதம் 1
Wed, 06 Aug 1958
புதன்
1958
விளம்பி ஆடி 21
தேய்பிறை சஷ்டி அச்சுவினி - பாதம் 1
Wed, 20 Aug 1958
புதன்
1958
விளம்பி ஆவணி 4
வளர்பிறை சஷ்டி சுவாதி - பாதம் 1
Thu, 04 Sep 1958
வியாழன்
1958
விளம்பி ஆவணி 19
தேய்பிறை சஷ்டி பரணி - பாதம் 3
Thu, 18 Sep 1958
வியாழன்
1958
விளம்பி புரட்டாசி 2
வளர்பிறை சஷ்டி அனுஷம் - பாதம் 1
Sat, 04 Oct 1958
சனி
1958
விளம்பி புரட்டாசி 18
தேய்பிறை சஷ்டி மிருகசீரிடம் - பாதம் 1
Sat, 18 Oct 1958
சனி
1958
விளம்பி ஐப்பசி 2
வளர்பிறை சஷ்டி மூலம் - பாதம் 4
Mon, 03 Nov 1958
திங்கள்
1958
விளம்பி ஐப்பசி 18
தேய்பிறை சஷ்டி புனர்பூசம் - பாதம் 3
Sun, 16 Nov 1958
ஞாயிறு
1958
விளம்பி கார்த்திகை 1
வளர்பிறை சஷ்டி உத்திராடம் - பாதம் 3
Tue, 02 Dec 1958
செவ்வாய்
1958
விளம்பி கார்த்திகை 17
தேய்பிறை சஷ்டி ஆயிலியம் - பாதம் 2
Tue, 16 Dec 1958
செவ்வாய்
1958
விளம்பி மார்கழி 1
வளர்பிறை சஷ்டி சதயம் - பாதம் 1

அந்த கிரகோரியன் நாளுக்கு தரவு இருக்கும்போது திதி மற்றும் நேர வரிகள் இங்கு சுருக்கமாகத் தெரிகின்றன; முழு விவரம் தினசரி காலண்டரில்.

ஆன்மீக திருவிழா தொடர்ச்சி

தமிழ்நாட்டு ஆன்மீக அனுபவம்

சஷ்டி திதி என்றால் என்ன?

இந்துப் பஞ்சாங்கத்தின்படி, அமாவாசை மற்றும் பௌர்ணமி ஆகிய நாட்களுக்குப் பிறகு வரும் ஆறாவது திதியே 'சஷ்டி' அல்லது 'ஷஷ்டி' என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு சந்திர மாதத்திலும் வளர்பிறையில் ஒரு சஷ்டியும், தேய்பிறையில் ஒரு சஷ்டியுமாக இரண்டு சஷ்டி திதிகள் வரும்.

இந்தத் திதியானது தமிழர்களின் முழுமுதற் கடவுளான முருகப் பெருமானுக்கு மிகவும் உகந்த மற்றும் மிகவும் சக்திவாய்ந்த வழிபாட்டு நாளாகும். செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட இந்த நாளில் முருகனை வழிபட்டால், தைரியம், தன்னம்பிக்கை மற்றும் எதையும் சாதிக்கும் ஆற்றல் கிடைக்கும் என்பது இந்துக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

புராணச் சிறப்பும் சூரசம்ஹாரமும்

புராணங்களின்படி, தேவர்களைத் துன்புறுத்தி வந்த அசுரனான சூரபத்மனை முருகப் பெருமான் அழித்து வெற்றி கண்ட நாள்தான் 'ஸ்கந்த சஷ்டி' என்று மிகவும் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படுகிறது. ஆறு நாட்கள் நடந்த கடுமையான போரின் முடிவில், ஐப்பசி மாத வளர்பிறை சஷ்டி அன்று முருகன் சூரனை ஆட்கொண்டு சேவற்கொடியாகவும், மயிலாகவும் மாற்றினார்.

இந்த நிகழ்வு மனிதர்களுக்குள் இருக்கும் ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று கொடிய அரக்கர்களை ஞானம் என்ற வேலால் அழித்து முக்தி அடைவதைக் குறிக்கிறது. எனவே சஷ்டி என்பது தீமையின் மீது நன்மை பெற்ற மாபெரும் வெற்றியின் அடையாளமாகும்.

சஷ்டி விரதத்தின் மகிமை

"சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்ற புகழ்பெற்ற தமிழ்ப் பழமொழி, உண்மையில் "சஷ்டியில் விரதமிருந்தால் அகப்பையில் (கருப்பையில்) குழந்தை உருவாகும்" என்ற ஆழமான பொருளைக் கொண்டது. குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் சஷ்டி விரதம் இருந்தால் நிச்சயம் நல்ல குழந்தை பிறக்கும் என்பது தமிழ்நாட்டின் தொன்றுதொட்ட நம்பிக்கையாகும்.

சஷ்டி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, உணவோ நீரோ அருந்தாமல் (அல்லது பால், பழம் மட்டும் சாப்பிட்டு) மாலையில் முருகன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்த பிறகே விரதத்தை முடிப்பது வழக்கம். இந்த விரதம் உடலைச் சுத்தப்படுத்தி, மனதை ஒருமுகப்படுத்துகிறது.

வளர்பிறை vs தேய்பிறை சஷ்டி

வளர்பிறை சஷ்டி: முருகப்பெருமானுக்கு விரதம் இருக்க வளர்பிறை சஷ்டியே முதன்மையானது. குழந்தை வரம், காரிய வெற்றி வேண்டி மக்கள் மாதந்தோறும் வளர்பிறை சஷ்டியில் விரதம் இருப்பார்கள். (ஐப்பசி மாதம் வரும் வளர்பிறை சஷ்டியே 'கந்த சஷ்டி' சூரசம்ஹாரம்).

தேய்பிறை சஷ்டி: இது பொதுவாகப் பெரிய அளவில் விரத நாளாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை.

உள் வழிசெலுத்தல்

தொடர்புடைய பண்டிகைகள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

சஷ்டி விரதம் இருந்தால் எதிரிகள் தொல்லை நீங்கும், தீராத நோய்கள் விலகும், குறிப்பாகக் குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

நாள் முழுவதும் விரதமிருந்து, மாலையில் அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று தீபாராதனை தரிசித்த பிறகே பிரசாதம் அல்லது எளிய உணவு உண்டு விரதத்தை முடிக்க வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் வரும் வளர்பிறை, தேய்பிறை சஷ்டி மாத சஷ்டி எனப்படும். ஆனால் ஐப்பசி மாத வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை ஆறு நாட்கள் இருப்பது ஸ்கந்த சஷ்டிப் பெருவிரதமாகும்.

சஷ்டி அன்று காலை மற்றும் மாலை வேளைகளில் குளித்துச் சுத்தமாக முருகனின் படத்திற்கு முன் அமர்ந்து படிப்பது மிகச் சிறந்தது.