தினசரி பஞ்சாங்கம் மற்றும் ஆன்மீக தகவல்கள்
மொழி: தமிழ் | English
சஷ்டி
தமிழ்நாடு · பஞ்சாங்க வழிகாட்டி

சஷ்டி

Shasti

சஷ்டி (ஷஷ்டி) திதி முருக பக்தியில் முக்கியமானது. சஷ்டி விரதம், முருகன் வழிபாடு, கந்தர் சஷ்டி கவசம் பாராயணம் போன்றவை தமிழ்நாட்டில் பரவலாக நடைமுறைப்படுகின்றன.

இன்னும் 2424 நாட்கள் உள்ளது

விழா தேதிகள் மற்றும் காலவரிசை

இன்றிலிருந்து கடந்த சஷ்டி
10 நாட்களுக்கு முன்
இன்றிலிருந்து அடுத்த சஷ்டி
3 நாட்களில்

2033 தேதிகள்

Thu, 06 Jan 2033
வியாழன்
2033
பிரமாதீச மார்கழி 22
வளர்பிறை சஷ்டி பூரட்டாதி - பாதம் 2
Fri, 21 Jan 2033
வெள்ளி
2033
பிரமாதீச தை 8
தேய்பிறை சஷ்டி உத்தரம் - பாதம் 4
Sat, 22 Jan 2033
சனி
2033
பிரமாதீச தை 9
தேய்பிறை சஷ்டி அத்தம் - பாதம் 3
Sat, 05 Feb 2033
சனி
2033
பிரமாதீச தை 23
வளர்பிறை சஷ்டி அச்சுவினி - பாதம் 1
Sun, 20 Feb 2033
ஞாயிறு
2033
பிரமாதீச மாசி 8
தேய்பிறை சஷ்டி சுவாதி - பாதம் 1
Sun, 06 Mar 2033
ஞாயிறு
2033
பிரமாதீச மாசி 22
வளர்பிறை சஷ்டி பரணி - பாதம் 4
Tue, 22 Mar 2033
செவ்வாய்
2033
பிரமாதீச பங்குனி 8
தேய்பிறை சஷ்டி அனுஷம் - பாதம் 3
Tue, 05 Apr 2033
செவ்வாய்
2033
பிரமாதீச பங்குனி 22
வளர்பிறை சஷ்டி மிருகசீரிடம் - பாதம் 3
Thu, 21 Apr 2033
வியாழன்
2033
பிரமாதீச சித்திரை 8
தேய்பிறை சஷ்டி பூராடம் - பாதம் 2
Wed, 04 May 2033
புதன்
2033
பிரமாதீச சித்திரை 21
வளர்பிறை சஷ்டி புனர்பூசம் - பாதம் 1
Fri, 20 May 2033
வெள்ளி
2033
பிரமாதீச வைகாசி 6
தேய்பிறை சஷ்டி திருவோணம் - பாதம் 1
Fri, 03 Jun 2033
வெள்ளி
2033
பிரமாதீச வைகாசி 20
வளர்பிறை சஷ்டி ஆயிலியம் - பாதம் 3
Sat, 18 Jun 2033
சனி
2033
பிரமாதீச ஆனி 4
தேய்பிறை சஷ்டி சதயம் - பாதம் 1
Sat, 02 Jul 2033
சனி
2033
பிரமாதீச ஆனி 18
வளர்பிறை சஷ்டி பூரம் - பாதம் 2
Sun, 03 Jul 2033
ஞாயிறு
2033
பிரமாதீச ஆனி 19
வளர்பிறை சஷ்டி உத்தரம் - பாதம் 1
Sun, 17 Jul 2033
ஞாயிறு
2033
பிரமாதீச ஆடி 1
தேய்பிறை சஷ்டி பூரட்டாதி - பாதம் 4
Mon, 01 Aug 2033
திங்கள்
2033
பிரமாதீச ஆடி 16
வளர்பிறை சஷ்டி அத்தம் - பாதம் 3
Tue, 16 Aug 2033
செவ்வாய்
2033
பிரமாதீச ஆடி 31
தேய்பிறை சஷ்டி அச்சுவினி - பாதம் 4
Wed, 31 Aug 2033
புதன்
2033
பிரமாதீச ஆவணி 15
வளர்பிறை சஷ்டி விசாகம் - பாதம் 1
Wed, 14 Sep 2033
புதன்
2033
பிரமாதீச ஆவணி 29
தேய்பிறை சஷ்டி கார்த்திகை - பாதம் 3
Fri, 30 Sep 2033
வெள்ளி
2033
பிரமாதீச புரட்டாசி 14
வளர்பிறை சஷ்டி கேட்டை - பாதம் 3
Thu, 13 Oct 2033
வியாழன்
2033
பிரமாதீச புரட்டாசி 27
தேய்பிறை சஷ்டி மிருகசீரிடம் - பாதம் 2
Sat, 29 Oct 2033
சனி
2033
பிரமாதீச ஐப்பசி 12
வளர்பிறை சஷ்டி பூராடம் - பாதம் 1
Sat, 12 Nov 2033
சனி
2033
பிரமாதீச ஐப்பசி 26
தேய்பிறை சஷ்டி பூசம் - பாதம் 1
Mon, 28 Nov 2033
திங்கள்
2033
பிரமாதீச கார்த்திகை 12
வளர்பிறை சஷ்டி திருவோணம் - பாதம் 4
Sun, 11 Dec 2033
ஞாயிறு
2033
பிரமாதீச கார்த்திகை 25
தேய்பிறை சஷ்டி ஆயிலியம் - பாதம் 3
Tue, 27 Dec 2033
செவ்வாய்
2033
பிரமாதீச மார்கழி 12
வளர்பிறை சஷ்டி சதயம் - பாதம் 3

அந்த கிரகோரியன் நாளுக்கு தரவு இருக்கும்போது திதி மற்றும் நேர வரிகள் இங்கு சுருக்கமாகத் தெரிகின்றன; முழு விவரம் தினசரி காலண்டரில்.

ஆன்மீக திருவிழா தொடர்ச்சி

தமிழ்நாட்டு ஆன்மீக அனுபவம்

சஷ்டி திதி என்றால் என்ன?

இந்துப் பஞ்சாங்கத்தின்படி, அமாவாசை மற்றும் பௌர்ணமி ஆகிய நாட்களுக்குப் பிறகு வரும் ஆறாவது திதியே 'சஷ்டி' அல்லது 'ஷஷ்டி' என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு சந்திர மாதத்திலும் வளர்பிறையில் ஒரு சஷ்டியும், தேய்பிறையில் ஒரு சஷ்டியுமாக இரண்டு சஷ்டி திதிகள் வரும்.

இந்தத் திதியானது தமிழர்களின் முழுமுதற் கடவுளான முருகப் பெருமானுக்கு மிகவும் உகந்த மற்றும் மிகவும் சக்திவாய்ந்த வழிபாட்டு நாளாகும். செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட இந்த நாளில் முருகனை வழிபட்டால், தைரியம், தன்னம்பிக்கை மற்றும் எதையும் சாதிக்கும் ஆற்றல் கிடைக்கும் என்பது இந்துக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

புராணச் சிறப்பும் சூரசம்ஹாரமும்

புராணங்களின்படி, தேவர்களைத் துன்புறுத்தி வந்த அசுரனான சூரபத்மனை முருகப் பெருமான் அழித்து வெற்றி கண்ட நாள்தான் 'ஸ்கந்த சஷ்டி' என்று மிகவும் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படுகிறது. ஆறு நாட்கள் நடந்த கடுமையான போரின் முடிவில், ஐப்பசி மாத வளர்பிறை சஷ்டி அன்று முருகன் சூரனை ஆட்கொண்டு சேவற்கொடியாகவும், மயிலாகவும் மாற்றினார்.

இந்த நிகழ்வு மனிதர்களுக்குள் இருக்கும் ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று கொடிய அரக்கர்களை ஞானம் என்ற வேலால் அழித்து முக்தி அடைவதைக் குறிக்கிறது. எனவே சஷ்டி என்பது தீமையின் மீது நன்மை பெற்ற மாபெரும் வெற்றியின் அடையாளமாகும்.

சஷ்டி விரதத்தின் மகிமை

"சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்ற புகழ்பெற்ற தமிழ்ப் பழமொழி, உண்மையில் "சஷ்டியில் விரதமிருந்தால் அகப்பையில் (கருப்பையில்) குழந்தை உருவாகும்" என்ற ஆழமான பொருளைக் கொண்டது. குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் சஷ்டி விரதம் இருந்தால் நிச்சயம் நல்ல குழந்தை பிறக்கும் என்பது தமிழ்நாட்டின் தொன்றுதொட்ட நம்பிக்கையாகும்.

சஷ்டி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, உணவோ நீரோ அருந்தாமல் (அல்லது பால், பழம் மட்டும் சாப்பிட்டு) மாலையில் முருகன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்த பிறகே விரதத்தை முடிப்பது வழக்கம். இந்த விரதம் உடலைச் சுத்தப்படுத்தி, மனதை ஒருமுகப்படுத்துகிறது.

வளர்பிறை vs தேய்பிறை சஷ்டி

வளர்பிறை சஷ்டி: முருகப்பெருமானுக்கு விரதம் இருக்க வளர்பிறை சஷ்டியே முதன்மையானது. குழந்தை வரம், காரிய வெற்றி வேண்டி மக்கள் மாதந்தோறும் வளர்பிறை சஷ்டியில் விரதம் இருப்பார்கள். (ஐப்பசி மாதம் வரும் வளர்பிறை சஷ்டியே 'கந்த சஷ்டி' சூரசம்ஹாரம்).

தேய்பிறை சஷ்டி: இது பொதுவாகப் பெரிய அளவில் விரத நாளாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை.

உள் வழிசெலுத்தல்

தொடர்புடைய பண்டிகைகள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

சஷ்டி விரதம் இருந்தால் எதிரிகள் தொல்லை நீங்கும், தீராத நோய்கள் விலகும், குறிப்பாகக் குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

நாள் முழுவதும் விரதமிருந்து, மாலையில் அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று தீபாராதனை தரிசித்த பிறகே பிரசாதம் அல்லது எளிய உணவு உண்டு விரதத்தை முடிக்க வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் வரும் வளர்பிறை, தேய்பிறை சஷ்டி மாத சஷ்டி எனப்படும். ஆனால் ஐப்பசி மாத வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை ஆறு நாட்கள் இருப்பது ஸ்கந்த சஷ்டிப் பெருவிரதமாகும்.

சஷ்டி அன்று காலை மற்றும் மாலை வேளைகளில் குளித்துச் சுத்தமாக முருகனின் படத்திற்கு முன் அமர்ந்து படிப்பது மிகச் சிறந்தது.